×

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்

பட்டுக்கோட்டை, மார்ச் 22: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆர்டிஓ பூங்கோதை தலைமை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான விளக்க உரை, வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தாசில்தார் அருள்பிரகாசம், தேர்தல் தனித்துணை தாசில்தார் தெய்வானை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags : Election Awareness Meeting ,Voting Officers ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில்...