பாபநாசம், மார்ச் 22: பாபநாசம் அடுத்த பசுபதிகோவில்- கண்டியூர் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையால் ஏற்படும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் அருகே பசுபதிகோவில்- கண்டியூர் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பகைளை உடனுக்குடன் அகற்றாததால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறார். இதனால் பொதுமக்கள் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.