மணல் கடத்திய வாலிபர் கைது லாரி பறிமுதல்

கும்பகோணம், மார்ச் 22: பட்டீஸ்வரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாலிபரை கைது செய்தனர். கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் திருமலைராஜன் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பட்டீஸ்வரம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அனுமயின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது லாரியில் இருந்த ஆரியப்படையூரை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (24) என்பவரை கைது செய்தனர். லாரி டிரைவரான சோழன்மாளிகையை சேர்ந்த பாஸ்கர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான பாஸ்கரை தேடி வருகின்றனர்.

Related Stories: