×

பாகலூர் அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை

கிருஷ்ணகிரி, மார்ச் 22:  பாகலூர் அருகே பெரியமுதலி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரப்பா மகள் ஹேமாவதி(16). இவர், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட ஹேமாவதி, நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாகலூர் போலீசார், ஹேமாவதி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : student suicide ,Baghalur ,
× RELATED மாணவன் தற்கொலை விவகாரம்: புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை