சேதுபாவாசத்திரம், மார்ச் 22: சேதுபாவாசத்திரம் அருகே மீன் பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்த மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.
சேதுபாவாசத்திரம் கரையூர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவருக்கு சொந்தமான பைபர் கிளாஸ் படகில் கடந்த 18ம் தேதி மாலை அவருடன் முஸ்லிம் தெருவை சேர்ந்த பஷீர்முகமது மகன் ஷேக்முகமது (20), சர்புதீன் மகன் காஜாமுகைதீன் (25) ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 3 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் போடப்பட்டிருந்த மீன்பிடி வலையை ஷேக்முகமது எடுத்தார். அப்போது அவர் நிலைதடுமாறி தலைகுப்புற கடலில் விழுந்து மாயமானார்.