திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது

திருவையாறு, மார்ச் 22: திருவையாறு அடுத்த வைத்தியநாதன்பேட்டையை சேர்ந்த சக்திவேல் மகள் சுகந்தி (22).  திருவையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். பாபநாசம் தாலுகா வளத்தமங்கலத்தை சேர்ந்த துரைமாணிக்கம் மகன் கண்ணதாசன் (24) இவரது உறவினர் வீடு, வைத்தியநாதன்பேட்டையில் உள்ளது.

இந்நிலையில் உறவினர் வீட்டுக்கு வரும்போது கண்ணதாசனுக்கும் சுகந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சுகந்தியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணதாசன் கேட்டுள்ளார். இதற்கு சுதந்தி மிரட்டியதால் மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து திருவையாறு போலீசில் சுகந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து கண்ணதாசனை கைது செய்தனர்.

Related Stories: