×

ஓசூரில் 27ம் தேதி நடைபெறவிருந்த கால்நடைகளுக்கான ஏலம் ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 22: ஓசூரில் வரும் 27ம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருந்த கால்நடைகளுக்கான பொது ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில், வரும் 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த கழிவு செய்யப்பட்ட கால்நடைகளுக்கான பொது ஏலம், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்தல் நடைமுறை விதியின்படி, பொது ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கழிவு செய்யப்பட்ட கால்நடைகள் ஏலம் தொடர்பாக, பின்னர் நாளிதழில் செய்தி வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்