தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கும்பகோணம், மார்ச் 22: கும்பகோணத்தில் தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. ஆணையர் (பொ) ஜெகதீசன் தலைமை வகித்தார். சைக்கிள் பேரணியை டிஎஸ்பி ஜெயச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மகாமக குளக்கரையில் இருந்து புறப்பட்ட வாகன பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கரராஜ், சுவாமிநாதன், மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சுவாமிநாதன் மற்றும் கல்லுாரி மாணவர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கோஷமிட்டவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் சென்றனர்.

Related Stories: