×

ஓசூரில் ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை

ஓசூர், மார்ச் 22: இடைத்தேர்தல் நடைபெறும் ஓசூர் சட்டமன்ற தொகுதியில், இன்னும் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு கடந்த 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்களாகியும், இதுவரை ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று மாலை 3 மணி வரை, கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். ஆனால், நேற்றும் யாரும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இரண்டு நாட்களாக பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என 17 பேர் மனுக்கள் வாங்கிச் சென்றுள்ளனர். முதல் நாள் செவ்வாய்க்கிழமை என்பதாலும், மறுநாள் சந்திரசூடேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழாவையொட்டி, உள்ளூர் விடுமுறை என்பதாலும் மனுக்கள் ஏதும் வரவில்லை. இன்று(நேற்று) யாராவது வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்த்ததில், ஏமாற்றமே மிஞ்சியது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : No one ,Hosur ,
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...