×

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி வாலிபர் பலி

பென்னாகரம், மார்ச் 22:  ஒகேனக்கல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடல், தீவிர தேடுதலுக்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டது. பாலக்கோடு அருகே மூங்கபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சம்பத்(35), கூலி தொழிலாளி. இவர் தனது உறவினர் ஈமக்காரியத்திற்காக நேற்று ஒகேனக்கல் வந்தார்.  ஆலாம்பாடி பகுதியில் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, சம்பத் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து, ஒகேனக்கல் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். இதன் பேரில், ஒகேனக்கல் போலீசார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பரிசல் ஒட்டிகளின் துணையுடன், சம்பத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.தீவிர தேடுதலுக்கு பின், ஆலாம்பாடி பகுதியில் சம்பத் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Hogenakkal ,teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை