×

இலுப்பூர் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

இலுப்பூர், மார்ச் 22: இலுப்பூர் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அன்னவாசல் அருகே உள்ள அகரப்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வராஜ் (33). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவர் தற்பொழுது விவசாய வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக தனது பைக்கில் இலுப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் வீடுநோக்கி சென்றார். அப்போது அன்னவாசலில் இருந்து பாறை கற்களை ஏற்றிவந்த டிப்பர் லாரி செல்வராஜ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Lupur ,
× RELATED சித்திரைக்குளம் பகுதியில்...