×

திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கூடுவாஞ்சேரி, மார்ச் 22: வண்டலூர்  அடுத்த ஊனமாஞ்சேரி சக்கரவர்த்தி நகரை சேர்ந்தவர் எடிசன். இவரது மனைவி காயத்திரி (19). இவர்களுக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த காயத்திரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, காயத்திரி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார். புகாரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் குறித்து கணவர் எடிசனிடம் விசாரிக்கின்றனர். திருமணாகி ஒரே ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால், செங்கல்பட்டு ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, மூதாட்டி கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.செங்கல்பட்டு அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கண் பார்வையற்றவர். இவரது மனைவி திலகம் (60). இவர்கள் அதே பகுதியில் உள்ள மகள் வீட்டில் வசிக்கின்றனர். திலகம் சர்க்கரை வியாதி காரணமாக மருத்துவனைக்கு சென்று வந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட இவர், நேற்று முன்தினம் காய்கறி அறியும் கத்தியால், கழுத்தை அறுத்து கொண்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, திலகம் நேற்று பரிதாபமாக இறந்தார். புகாரின்படி பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : teenager ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை