×

வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கழுக்குன்றம், மார்ச் 22: வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்திலுள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. செய்யூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். கொடூர் வருவாய் ஆய்வாளர் பாலச்சந்தர், கடலூர் விஏஓ செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யூர் தாசில்தார் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசினார். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...