திருக்கழுக்குன்றம், மார்ச் 22: நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கல்பாக்கம் அடுத்த இளையனார்குப்பம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. காஞ்சிபுரம் தென்மண்டல செயலாளர் சஞ்சீவிநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜன், சூசைராஜ், தேசிங்கு, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு கலந்து கொண்டார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் சிவரஞ்சனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.