×

காரைக்காலில் தேர்தல் துறை அதிகாரிகளுடன் பார்வையாளர் ஆலோசனை

காரைக்கால், மார்ச் 22:  காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை அதிகாரிகளுடன், புதுச்சேரி தேர்தல் பார்வையாளர் (செலவுகள்) ஆஷிம்குமார் சக்ரவர்த்தி ஆலோசனை நடத்தினார். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் துறை, தேர்தல் நேர்மையாகவும், அமைதியாக நடைபெறவும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெறவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

மாவட்ட தேர்தல் துறையின் பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, புதுச்சேரி   தேர்தல் பார்வையாளர் (செலவுகள்) ஆஷிம்குமார் சக்ரவர்த்தி நேற்று வருகை தந்தார். இவர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விகராந்த்ராஜாவுடன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன், அரசியல் கட்சி வேட்பாளர்களின் புதிய செலவினங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம், தேர்தல் முடியும் வரை, காரைக்காலில் நடைபெறும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை உரிய வீடியோ ஆதரங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags : Viewers ,election officials ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...