×

பொள்ளாச்சி சம்பவம் கண்டித்து வி.சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில், மார்ச் 22: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்து பரசலூர் மேலமுக்கூட்டில், பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்தின் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் ரஜினி முன்னிலை வகித்தார்.

ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் வரவேற்றார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச்செயலாளர் ஆக்கூர் செல்வஅரசு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். தமிழக அரசு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை காவல் துறையினர் ரகசியமாக காத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் நாடாளுமன்ற செயலாளர் கதிர்வளவன், அறிவழகன், ரியாஸ்கான், தேவா, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : party ,incident ,Pollachi ,
× RELATED காங்கிரஸில் இணைய நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம்..!!