வேதாரண்யம், மார்ச் 22: வேதாரண்யம் நாகை சாலையில் உள்ள பாரதிதாசன் மாதிரி கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். துணை முதல்வர் பிரபாகரன் வரவேற்றார். விளையாட்டு போட்டினை வேதாரண்யம் டி.எஸ்.பி காந்த் துவக்கி வைத்தார். பின்பு கல்லூரி வாளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி திருமணி தலைமை வகித்து மறைவணம் என்ற கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட ராஜா நன்றி கூறினார்.