×

இரு வீடுகளை உடைத்து திருடிய கொள்ளையன் கைது

ஆவடி, மார்ச் 22: ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் இரு வீடுகளை உடைத்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மேலும், வெள்ளி பொருட்கள், ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டாபிராம், மாடர்ன் சிட்டி, 3வது தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (35). இவர் ஆவடி டேங்க் பேக்டரி ஊழியர். இவரது மனைவி திவ்யாபாரதி. இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு லோகேஷ் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திவ்யபாரதி பெற்றோர் வீடான திருத்தணிக்கு சென்று இருந்தார். இதற்கிடையில், நள்ளிரவு அவரது வீட்டை உடைத்து ₹3 லட்சம் ரொக்க பணம், ஒரு சவரன் தங்க நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதே போல் பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்ரம் என்பவரது  வீட்டையும் உடைத்து மர்ம நபர்கள் வெள்ளி பொருட்களையும் தூக்கி சென்றனர். இதுகுறித்தும் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்த நிலையில்,  விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியைச் சார்ந்த குள்ளகுமார் (43) என்பவரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.பின்னர், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒரு கிலோ வெள்ளி பொருட்களும், ₹75 ஆயிரம் ரொக்க பணமும் பறிமுதல் செய்து, குள்ளகுமாரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : robbers ,houses ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...