×

வீட்டை உடைத்து கொள்ளை

ஆவடி, மார்ச் 22: ஆவடி அருகே ஏற்றுமதி ஆடை நிறுவன ஊழியர் வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த வீராபுரம், வினோ நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சேகர் (47). இவர் ஆவடியில் உள்ள ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலா (42). இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சேகர் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றார். அதன்பிறகு, விமலா வீட்டை பூட்டிவிட்டு பெரியபாளையத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்றார். பின்னர், அவர் மாலை மீண்டும் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.விமலா உள்ளே சென்று பார்த்தார் அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5சவரன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போயிருந்தது. தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்