×

குளித்தலை தண்ணீர்பள்ளி கல்யாண சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா

குளித்தலை, மார்ச் 22: கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த தண்ணீர்ப்பள்ளியில் தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை தண்ணீர்ப்பள்ளி மார்க்கண்டேயன் கோவிலில் இருந்து உற்சவர் முருகன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. நேற்று காலை  காவிரியிலிருந்து பால்குடம், தீர்த்தகுடம் எடுத்து வந்து சுப்ரமணியசுவாமிக்கு பாலாபிஷேகம், தேன் அபிஷேகம், பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Marai Uthiram Festival ,Subramania Swamy Temple ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்