×

கோயில்களில் பவுர்ணமி கிரிவலம்

தோகைமலை, மார்ச் 22:  தோகைமலை அருகே சின்னரெட்டியபட்டி ஆவுடையலிங்கேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டியபட்டியில் 300 அடி உயரத்தில் 2.60 கி.மீ சுற்றளவு கொண்ட பாறையால் ஆன குன்னுடையார் மலை உள்ளது. இந்த மலை உச்சியில் ஆவுடையநாயகி உடனான ஆவுடையலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் நேற்று பங்குனி மாதத்தின் பவுர்ணமி என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொள்ள வந்தனர்.

முன்னதாக மலை மீது உள்ள கோயிலில் ஆவுடையலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஓதுவார்கள் பூஜைகளை செய்தார்கள். அதனை தொடர்ந்து ஓதுவார்கள் பல்வேறு சிவன் பாடல்களை பாடிக்கொண்டு ஆவுடையலிங்கேஸ்வரரின் குன்னுடையார் மலையை சுற்றி ஊர்வலமாக கிரிவலம் வந்தனர். மலைக்கோயிலில் சுவாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள்  செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதே போன்று தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் மலைக் கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள்,
கிரிவலம் நடந்தது.

Tags : Poornima Giriavalam ,temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு