×

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க பதநீர், நுங்கு விற்பனை விறுவிறுப்பு

கரூர், மார்ச் 22: கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பதநீர் மற்றும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
மதுரை சேலம் பைபாஸ் சாலையில் கரூர் மாவட்ட எல்லை கரூரில் இருந்து வேலாயுதம்பாளையம் வரை உள்ளது. முக்கிய பைபாஸ் சாலை என்பதால் போக்குவரத்தும் அதிகளவு உள்ளது.கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டம் முழுதும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இந்நிலையில் பைபாஸ் சாலையில் செல்லும் பொதுமக்களை குறி வைத்து, சாலையோரம் பதநீர் மற்றும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு ஒரு டம்ளர் பதநீர் ரூ. 20க்கும், மூன்று நுங்குகள் ரூ. 20க்கும் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்களும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பதநீர் மற்றும் நுங்கினை வாங்கிச் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா