×

வெள்ளியணை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

கரூர், மார்ச் 22: கரூர் அருகே உள்ள வெள்ளியணை அரசு மருத்துவமனை அருகே கரூர்- பாளையம் சாலையில் மணல் லாரியை வெள்ளியணை போலீசார் சோதனை நடத்தினர். மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. லாரியுடன் 3 யூனிட் மணலை பறிமுதல் செய்து தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த குமார்(25) என்பவரை கைது செய்தனர். மேலும் அதே ஊரை சேர்ந்த சேட்டு என்பவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா