சென்னை: உரிய ஆவணங்கள் இன்றியும், சர்வதேச விதிகளை மீறியும் கடல் வழியாக கப்பலில் 100 பேரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய நபரை கேரளா போலீசார் சென்னையில் கைது ெசய்தனர். கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 100 பேரை எந்த வித பாஸ்போர்ட்டும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கடல் வழியாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அனுப்பியதாக கேரளா போலீசார் வழக்கு பதிவு ெசய்து சிலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும், குற்றவாளிகளை ேகரளா தனிப்படை போலீசார் சென்னை ஆயிரம்விளக்கு போலீசார் உதவியுடன் தேடி வந்தனர். அதன்படி ஆயிரம் விளக்கு போலீசார் குற்றவாளிகளின் செல்போன் எண்ணை வைத்து ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, கேளம்பாக்கம் சபாபதி நகரில் பதுங்கி இருந்த ஆறுமுகம் (43) என்பவரை அதிரடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.