சென்னை: தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரயில் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த 5ம் தேதி தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ஒருவர் மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலே பலியானார். இதையடுத்து அங்கிருந்த ரயில் பயணிகள் நடந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.