திருமணம் ெசய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சென்னை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் ெசய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (எ) பால் மணி (25). சென்னை மாம்பலத்தில் உள்ள உடல் பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மாம்பலம் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை ஜஸ்டின்  பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாணவியை ஜஸ்டின் (எ) பால்மணி அறைக்கு அழைத்து வந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீட்டிற்கு வந்த மாணவி சோர்வாக இருந்ததை பார்த்து பொற்றோர் கேட்டுள்ளனர். அப்போது, நடந்த சம்பவங்களை அவர் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பொற்றோர் ஜிம் பயிற்சியாளர் ஜஸ்டின் (எ) பால்மணி மீது சைதாப்பேட்டை அனைத்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி போலீசார் ஜஸ்டின் (எ) பால்மணியை பிடித்து விசாரித்தபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது ெசய்தனர்.

Related Stories: