உடன் பிறந்த தம்பிக்கு தெரியாமல் போலி ஆவணம் மூலம் 137 ஏக்கர் நில மோசடி: மின்வாரிய அதிகாரி கைது

சென்னை: உடன் பிறந்த தம்பிக்கு தெரியாமல் 137 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த மின்வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கார்த்திகேயன் (57), காண்டீபன் (53). இதில் சென்னை செம்பியத்தில் வசிக்கும் கார்த்திகேயன் தாம்பரம் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். கார்த்திகேயன் மற்றும் காண்டீபனுக்கு சொந்தமாக 137 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தை தம்பி காண்டீபனுக்கு தெரியாமல் கடந்த 2017ம் ஆண்டு கார்த்திகேயன் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளார். இதுசம்பந்தமாக காண்டீபன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் கார்த்திகேயனை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை ராயபுரம் பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை பொன்னேரி போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து புழல் சிறையிலடைத்தனர்.

Related Stories: