சென்னை: உடன் பிறந்த தம்பிக்கு தெரியாமல் 137 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த மின்வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கார்த்திகேயன் (57), காண்டீபன் (53). இதில் சென்னை செம்பியத்தில் வசிக்கும் கார்த்திகேயன் தாம்பரம் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். கார்த்திகேயன் மற்றும் காண்டீபனுக்கு சொந்தமாக 137 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.