×

பராமரிப்பு பணி சந்தைபேட்டை மின்மயானம் ஐந்து நாட்கள் இயங்காது

காரைக்குடி, மார்ச் 21: காரைக்குடி சந்தைபேட்டையில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் 5 நாட்கள் நிறுத்தப்பட உள்ளது.
காரைக்குடி சந்தைபேட்டை நவீன எரிவாயு தகன மேடை அறக்கட்டளை செயலாளர் சாமிதிராவிடமணி, ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பன் கூறுகையில், காரைக்குடி சந்தைபேட்டை பகுதியில் நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இறந்தவர்கள் உடல் குறைந்த கட்டணத்தில் எரிக்கப்பட்டு வருகிறது. இங்கு இயங்கி வரும் மின்சார கருவிகளான மோட்டர், மின் விளக்குகள் பழுது நீக்கவும், புதிய உதிரிபாகங்களை பொருத்தவும் மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு தற்காலிகமாக வரும் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு பணி நிறுத்தப்பட உள்ளது. 30ம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என்றனர்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்