×

ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு ரூ.7 கோடி மதிப்பில் அதிநவீன கருவிகள்

காரைக்குடி, மார்ச் 21: அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு என ரூசா 2.0 திட்டத்தில் ரூ.7 கோடியில் இரண்டு அதிநவீன கருவிகள் வாங்கப்பட உள்ளன என துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகல் நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. துறைத் தலைவர் குருநாதன் வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், இது போன்ற பன்னாட்டு கருத்தரங்குகள் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட கிடைத்த நல்ல வாய்ப்பு. பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இப்பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில் ரூசா 2.0 திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதியில் துறையிடை அறிவியல் துறைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.7 கோடியில் என்எம்ஆர் மற்றும் எக்ஸ்ஆர்டி என்ற இரண்டு அதி நவீன கருவிகள் வாங்கப்பட உள்ளன. நானோ தொழில்நுட்பத்துறை ஆற்றல் கருவிகள் மருத்துவத்துறை மற்றும் பல்வேறு தொழிலகத் துறைகயில் அதிக அளவில் பயன்படுகிறது. மருத்துவத்துறையில் நோயை தடுப்பதற்கும் அடையாளம் காண்பதற்கும் குணப்படுத்தவும் பயன்படுகிறது. தவிர சூரிய மின்கலன்கள், லித்தியம் பேட்டரிகள், அதிநவீன மின்தேக்கிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் நானோ கருவிகள் பயன்படுகின்றன. இப்பல்கலைக்கழக உயிரி அறிவியல் மற்றும் நானோ அறிவியல் துறைகள் உலகின் உயர்தர பல்கலைக்கழகங்களான அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம், டிரக்சைல் பல்கலைக்கழகம் ஆகிவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது’’ என்றார். சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி, தென்கொரியா, சியோல் டாங்கக் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் சீஜூன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் பாலலட்சுமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...