×

கொலை வழக்கில் வாலிபர் சரண்

சிவகங்கை, மார்ச் 21: திருப்புவனம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிவகங்கை நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்தார்.
திருப்புவனம் அருகே மிக்கேல்பட்டணத்தை சேர்ந்த பாலாமணி மகன் பிரசாந்த்(22). இவர் கடந்த 17ம் தேதி படமாத்தூர் அருகே வேலாங்குளம் கண்மாயில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் கச்சநத்தம் கிராமத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார். பிரசாந்த் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பாச்சேத்தி போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் கீழக்குளத்தை சேர்ந்த காளிமுத்து மகன் பிரவீன்குமார்(22) சிவகங்கை ஜேஎம்2 நீதி மன்றத்தில் நீதிபதி லலிதாகுமாரி முன்னிலையில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்