×

25 கி.மீ வீணாக சுற்றுகிறோம் நயினார்கோவிலுக்கு கூடுதல் டவுன் பஸ் பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 21: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மிகவும் பிரசித்தி பெற்ற நயினார்கோவிலில் உள்ள நாகநாத சுவாமியை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து அரியான் கோட்டை, பணிதிவயல், நகரம் வழியாக நயினார் கோவிலுக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகு பொதுமக்கள் கூறுகையில், ’கூடுதல் பஸ்கள் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றோம். ஆர்.எஸ்.மங்கலம். செட்டியமடை, புலி வீரதேவன் கோட்டை,குயவனேந்தல், அரியான் கோட்டை, பணிதிவயல் போன்ற கிராமங்களில் உள்ள எங்களுக்கு சரியான பஸ் வசதி இல்லை. இதனால் இளையான்குடி வழியாக பரமக்குடி சென்று சுமார் 45 கி.மீ சுற்றி வரவேண்டிய சூழல் உள்ளது. இதனால் சுமார் 25 கி.மீ தூர வீணாக சுற்றி வரவேண்டி உள்ளது. இதனால் பண விரையம் மற்றும் கால விரையம் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலம் கருதி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்’ என்றனர்.

Tags : city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்