திருவெறும்பூர், மார்ச் 21: திருவெறும்பூரில் பொதுமக்கள் அனைவரும் வரும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள், கலை நிகழ்ச்சிகள், பேரணிகள், மனித சங்கிலி மற்றும் துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.