பொள்ளாச்சி பாலியல் சம்பவம் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச் 21: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டினத்து திருச்சியில் இந்து முன்னணி கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கிடக்கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி திருச்சியில் உறையூர் குறத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் ராமசிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜீவரத்தினம், கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: