தஞ்சை, மார்ச் 21: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் தூக்கிலிட வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மாணவர் இயக்க மாநில பொது செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை சேர்ந்த அனைவரையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.