×

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

பொன்னமராவதி, மார்ச் 21: பொன்னமராவதி பகுதியில் அதிக அளவு மணல் அனுமதியின்றி அள்ளப்படுவதாக வந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை கனிமவள மற்றும் புள்ளியியல் துறை துணை இயக்கனர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது மணப்பட்டி என்ற இடத்தில் வந்த இரண்டு மணல் லாரிகளை பிடித்து விசாரித்தனர். அதில் அனுமதியின்றி மணல் கொண்டு சென்றதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...