கறம்பக்குடி, மார்ச் 21: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கறம்பக்குடி தாலுகா அலுவலகம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இதில் கறம்பக்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை மனித சங்கிலி மக்கள் கைகோர்த்து நின்றனர். புதுகை ஆர்டிஓ தண்டாயுதபாணி தலைமை வகித்து தொடங்கி வைத்து மனித சங்கிலியில் பங்கேற்றார். கறம்பக்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், தேர்தல் துணை தாசில்தார் குமரப்பன், துணை தாசில்தார் புவியரசன் மற்றும் விஏஓவினர், தாலுகா அலுவலக பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.