×

மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல் 3 பேர் மீது வழக்குப்பதிவு

மணமேல்குடி, மார்ச் 21: மணமேல்குடி அடுத்த மேலஸ்தானம் கண்மாயில் சவுடு மணல் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முறையான அனுமதி பெறாமல் இரவு நேரத்தில் மணல் லாரிகளில் அள்ளுவதாக வந்த தகவலின் பேரில் கோட்டைபட்டிணம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் மேலஸ்தானம் கண்மாய்க்கு சென்று அங்கு மணல் அள்ளி வந்த ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதன்  டிரைவர் மணமேல்குடி பகுதியை சேர்ந்த நியாஸ் என்பவரையும் கைது செய்தனர். மேலும் இந்த மணல் அள்ள உறுதுணையாக இருந்ததாக மணமேல்குடி பகுதியை சேர்ந்த பழனிவேல், பரணிதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு