×

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

ஆவடி, மார்ச் 21: ஆவடி, ரெட்டிபாளையம், சின்னம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு (18). டிப்ளமோ இன்ஜினியர். இதே பகுதியை சேர்ந்தவர் பள்ளி மாணவி.  
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து, அவளை பெற்றோர்  பல்வேறு இடங்களில் தேடியும்  எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆவடி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினர்.

இதற்கிடையில், சில தினங்கள் கழித்து மாணவியை, டில்லிபாபு திருமுல்லைவாயலில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். பின்னர், அவளை உறவினர்கள் பெற்றோர் வீட்டில் ஒப்படைத்தனர். இது குறித்து மாணவியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியை திருமண ஆசை காட்டி டில்லிபாபு கடத்தி சென்றுள்ளார். பின்னர், அவர் திருவண்ணாமலை, திருத்தணி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து டில்லிபாபுவை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். இதன் பிறகு,  அவரை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...