×

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர், மார்ச் 21: திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் மற்றும் பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுந்தரராஜ், பி.கே.நாகராஜ், ராஜேந்திரன், பாலாஜி, ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமை வகித்து, தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்தும், வாக்காளர்களிடம் நேரில் சென்று வாக்குகளை சேகரிப்பது குறித்தும் விளக்கினார். கூட்டத்தில், வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் பூவை சி.ஜெரால்டு, ஆர்.டி.இ. ஆதிசேஷன், கே.திராவிடபக்தன், கே.ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன் மற்றும் வழக்கறிஞர்கள் லோகராஜ், எஸ்.கே.ஆதாம், பரிபூரணம். கருணாகரன், கிருஷ்ணகுமார், எம்.கே.சுப்பிரமணி, ராம் பிரசாத், பூண்டி தயாளன், ராஜராஜன் உட்பட நீதிமன்ற துணை அமைப்பாளர்கள், கழக வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். முடிவில், புரட்சிதாசன் நன்றி கூறினார்.

Tags : DMK Advocate ,team consultation meeting ,south district ,Tiruvallur ,
× RELATED திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்