×

முதியோர்களுக்கு புத்துணர்வு நிகழ்ச்சி

பொன்னேரி, மார்ச் 21: பொன்னேரி அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் சமூக நல அறக்கட்டளை சார்பில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும், அவர்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும் ‘தாய் தொட்டில்’ எனும் முதியோர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கவரைப்பேட்டை, மீஞ்சூர் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் வசிக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட 150 முதியோர்கள் கலந்து கொண்டனர். இதில் வயதான இசைக்கலைஞர்களின் பாடல்களும், தொடு சிகிச்சை மூலம் நோய்களை போக்கி கொள்ளுதல்விளக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...