×

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை ஆளுங்கட்சி புறக்கணிப்பதாக புகார்

புழல், மார்ச் 21:திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை ஆளுங்கட்சியினர் புறக்கணிப்பதாக புகார் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும், அடுத்த மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இந்நிலையில், பல்வேறு தொகுதிகளில் கூட்டணி கட்சியினரை ஆளுங்கட்சி புறக்கணித்து வருவதாக புலம்பி வருகின்றனர்.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் தற்போதைய எம்பி டாக்டர் வேணுகோபால் மீண்டும் போட்டியிடுகிறார். எனினும், மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுகவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாமக, தமாகா நிர்வாகிகளுக்கு இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், பாஜ நிர்வாகிகளிடம் மட்டும்  ஆளுங்கட்சியினர் மறைமுக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என கூட்டணி கட்சியினர் புலம்பி வருகின்றனர்.

Tags : party ,executives ,assembly constituency ,Madhavaram ,alliance parties ,
× RELATED நாம் தமிழர் கட்சியில் இருந்து...