×

மாமல்லபுரம் செல்லும் வழியில் ஆலத்தூர் கிராமத்தில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர், மார்ச் 21: மாமல்லபுரம் செல்லும் வழியில் ஆலத்தூர் கிராமத்தில், சேதமடைந்துள்ள சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் ஆலத்தூர் கிராமத்தில், பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. இந்த சாலை கடும் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையின் நடுவே உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

இதனால் மாமல்லபுரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், இந்த திடீர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஆலத்தூர் சிட்கோ நுழைவாயில் அருகிலும், சாலையில் சேதம் ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. தற்போது பையனூர் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் ஆலத்தூர் பகுதியிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Vehicle drivers ,road ,village ,Alathur ,Mamallapuram ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி பலி