×

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை

காஞ்சிபுரம், மார்ச் 21: நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்களுடன் மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும்  கலெக்டர் பொன்னையா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் 2019 மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய  சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுஜித்குமார், செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு பூபேந்திர சிங் ஆனந்  ஆகியோரை தேர்தல் செலவின கணக்கு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை, காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பொன்னையா, நேற்று நேரில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எவ்வித தொய்வின்றி நடுநிலையோடு இக்குழுக்களில் உள்ள அனைத்து பணியாளர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : collector ,elections ,Lok Sabha ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...