×

தாம்பரம் அருகே பயங்கரம் மனைவியை கொலை செய்து சடலம் செப்டிக் டேங்கில் வீச்சு

தாம்பரம், மார்ச் 21 : தாம்பரம் அருகே பெண்ணை கொலை செய்து, சடலத்தை செப்டிக் ேடங்கில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரது கணவரை வலைவீசி தேடிவருகின்றனர். தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரி, அகரம்தென் பிரதான சாலையை சேர்ந்தவர் குணசேகரன் (54). சொந்தமாக விவசாய நிலம் மற்றும் மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விழுப்புரத்தை சேர்ந்த தேவி (35) என்ற இளம்பெண், தனது கணவனுடன் சண்டைபோட்டு, வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தனக்கு வேலை வேண்டும் எனவும் குணசேகரனிடம் கூறியுள்ளார். இதையடுத்து குணசேகரன், தனது விவசாய நிலம் மற்றும் மாடுகளை பராமரிக்க தேவியை அங்கேயே தங்கி வேலை செய்ய ஒப்பு கொண்டார். அதன்படி, தேவியும் வேலை ெசய்து வந்தார்.

இதற்கிடையில், கடந்த 3ம் தேதி தேவியின் கணவர், தாம்பரம் வந்தார். குணசேகரனின் நிலத்தில் வேலை செய்த தேவியை மீண்டும் சொந்த ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் தேவி, மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் இங்கேயே தங்கி வேலை செய்கிறோம் என கூற, அதற்கு குணசேகரன் சம்மதித்துள்ளார். இந்தவேளையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, கடந்த 16ம் தேதியில் இருந்து தேவி மற்றும் அவரது கணவர் மயமாகினர். இதனால் இருவரும் அவர்களது சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என குணசேகரன் கண்டு கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை குணசேகரனின் நிலத்தில் உள்ள செப்டிக்டேங்கில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள், செட்டிக் டேங்க்கை திறந்து பார்த்தனர். அதில் தேவி சடலமாக கிடந்ததை கண்டு குணசேகரன் அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தேவியின் கணவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tambaram ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!