×

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு

ஜெயங்கொண்டம், மார்ச் 21: ஜெயங்கொண்டம் சட்டமன்ற ெதாகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்பி சீனிவாசன் ஆய்வு செய்தார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி சீனிவாசன் ஆய்வு செய்தார். பின்னர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலையில் பெரிய ஆத்துக்குறிச்சி மற்றும் கும்பகோணம்- சென்னை சாலையில் காடுவெட்டியிலும் புதிதாக சோதனைச்சாவடிகளை திறந்து வைத்தார். இதைதொடர்ந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். அப்போது எஸ்பி சீனிவாசன் கூறுகையில, வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம் என்றார்.
ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி, மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தா.பழூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : SP ,constituency ,Jayankondam Assembly ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...