×

திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரசாரம்

சத்தியமங்கலம், மார்ச் 21: பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சை புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலத்திற்கு ராசா நேற்று வந்தார். அவருக்கு புஞ்சைபுளியம்பட்டி நகர செயலாளர் சிதம்பரம், சத்தியமங்கலம் நகர பொறுப்பாளர் ஜானகி மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே எஸ்பிஎஸ் கார்னரில் ஆ.ராசா பேசியதாவது: `மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பிறந்த வீடு பெரம்பலூர் பகுதியாக இருந்தாலும் நீலகிரி தொகுதி புகுந்த வீடுதான். கடந்த முறை வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த எம்பி தொகுதி பக்கமே வரவில்லை. நான் எம்பியாக இருந்தபோது சத்தியமங்கலத்திற்கு சார்பு நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதியிடம் தெரிவித்தபோது அவர் சார்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டார்.  நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் எம்பி தொகுதி நிதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். எனவே எனக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : A Raja ,DMK ,campaign ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...