பெரியூர் மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம், மார்ச் 21:  சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியூர் மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு புஷ்ப பல்லக்கு மெரவணை ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் முன்பு 60 அடி நீளத்தில் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பூசாரி மூர்த்தி குண்டம் இறங்கினார். இதைத்தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின்போது அம்மன் உற்சவர் சிம்மவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று மாலை 6 மணிக்கு கோயில் முன்பு தேரோட்டம் நடந்தது. பெரியூர் சுற்றுவட்டா கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related Stories: