பச்சை மிளகாய் விலை உயர்ந்தது

திருப்பூர்,மார்ச்21:  திருப்பூர்-பல்லடம்  சாலை தென்னம்பாளையத்தில் உழவர் சந்தை செயல்படுகிறது. திருப்பூர், கோவில்  வழி, அருள்புரம், நல்லூர், செவந்தபாளையம், அல்லாலபுரம், நொச்சிபாளையம்,  மங்கலம், அணைப்பாளையம், முதலிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளிலுள்ள   விவசாயிகள் தங்களுடைய  விளைநிலங்களிலுள்ள காய்கறிகளை அறுவடை செய்து,  திருப்பூர் உழவர் சந்தை, மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை  செய்கின்றனர். ‘பச்சை மிளகாய் செடியில் பூ பிடிக்கும்  பருவத்தில் கடும் கோடையால் பூ கருகி கீழே விழுந்து வருகிறது.  இதனால் பச்சை  மிளகாய் உற்பத்தி  குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  திருப்பூர் தெற்கு உழவர் சந்தை, மொத்த காய்கறி சந்தையில் கடந்த சில  நாட்களுக்கு முன் கிலோ ரூ.25 க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.50க்கு  விற்பனையாகிறது.

Related Stories: