×

மணலில் புதைந்து தொழிலாளி சாவு

கோவை, மார்ச் 21:  பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மிதுன் மஞ்சித் (30). காஸ்டிங் நிறுவன தொழிலாளி. இவர் ேகாவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு காஸ்டிங் நிறுவனத்தில் 3 மாதமாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இவர் காஸ்டிங் நிறுவனத்தில் பணியாற்றிய போது மெஷின் பிளேட் உடைந்தது. மேலே நின்று கொண்டிருந்த மிதுன் மஞ்சித், 7 அடி ஆழமுள்ள காஸ்டிங் மணலில் புதைந்தார். மணல் மூடிய நிலையில் மூச்சு திணறிய அவர் பரிதாபமாக இறந்தார். சக தொழிலாளர்கள் மணலை தோண்டி சடலத்தை மீட்டனர். பீளமேடு போலீசார் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக நிறுவன மேற்பார்வையாளர் கருப்புசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு