கோவை, மார்ச் 21:கோவையில் ஓய்வு பெற்ற நர்சை கழுத்து அறுத்து கொன்று 6 பவுன் நகை திருடிய மிளகாய் பொடி டெக்னிக் தெரிந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜயானந்தன் (83). இவர் மனைவி மேரி ஏஞ்சலின் (73). இவர், சென்னை அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வசிக்கின்றனர். விஜயானந்தன் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேரி ஏஞ்சலின் தனது கணவருடன் 10 ஆண்டாக வேளாங்கண்ணி நகரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். தனது வீட்டின் அருகே மற்றொரு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். வீடு தற்போது காலியாக இருந்தது. கடந்த 18ம் தேதி இரவு 35 வயது அந்த நபரும், ஒரு பெண்ணும் வீட்டை வாடைக்கு கேட்டு வந்தனர். வாடகை வீட்டை காட்ட சொல்லி அழைத்து சென்று கழுத்தறுத்து கொன்று 6 பவுன் நகை பறித்து தப்பினர்.